சாம்பார்
தேவையான பொருட்கள்
- துவரம் பருப்பு 1/2 கப்
- பாசிப்பருப்பு 1/4 கப்
- தக்காளி-2
- பூண்டு 10 பல்
- வெங்காயம்-1
- புளி நெல்லிக்காயளவு
- பச்சை மிளகாய் 3
- தனி மிளகாய் தூள் 1 tsp
- மஞ்சள் தூள் 1/2 tsp
- உப்பு தேவையான அளவு
சாம்பார் தாளிக்க.
- எண்ணெய் 3 tsp
- கடுகு 1/2 tsp
- வெங்காயம்-1
- கருவேப்பிலை ஒரு கொத்து
செய்முறை விளக்கம் .
- முதலில் ஒரு குக்கரில் பாசி பருப்பு மற்றும் துவரம் பருப்பு சேர்க்கவும்.
சேர்த்து நன்கு கழுவி வைத்துக் கொள்ளவும்.
பின் தக்காளி பச்சை மிளகாய் ஒரு வெங்காயம் 10 பல் பூண்டு சேர்க்கவும்.
- பின் பருப்பு மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்க்கவும்.
- கால் மேஜைக்கரண்டி மஞ்சள்தூள்
- . அரை மேஜைக்கரண்டி தனி மிளகாய் தூள் சேர்க்கவும்.
- சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
- பின் குக்கரை மூடி 4 விசில் விடவும்.
- 4 விசில் வந்ததும் 10 நிமிடம் கழித்து குக்கரை திறந்து தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
- ஒரு மத்து வைத்து பருப்பை நன்கு கடைந்து கொள்ளவும்.
- புளி கரைசலை சேர்க்கவும்.
- தாளிக்க ஒரு கடாயில் 3 மேஜைக்கரண்டி எண்ணெய் சேர்க்கவும் எண்ணெய் காய்ந்ததும் அரை மேசைக்கரண்டி கடுகு சேர்க்கவும்.
- கடுகு பொரிந்ததும் வெட்டி வைத்த வெங்காயம் சேர்த்து வதக்கவும் அதனுடன் ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.
- வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் கடைந்து வைத்த பருப்பு கரைசலை சேர்க்கவும்.
- சாம்பார் ஒரு கொதி வந்தவுடன் கடைசியாக மல்லித்தழை தூவி இறக்கவும்.
சுவையான சாம்பார் தயார் வெள்ளை சாதம் மற்றும் இட்லி தோசையுடன் ஏற்றதாக இருக்கும்.
தயாரிப்பு நேரம்
5 நிமிடம்
சமையல் நேரம்
15 நிமிடம்
மொத்த நேரம்
20 நிமிடம்
பரிமாறுதல்
5பேர்







கருத்துகள்
கருத்துரையிடுக